Sunday 1 April 2012

கல்வியின் பிறப்பு புதன்



Add caption

திருவெண்காடு புதன் கோவில்


கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.

திருத்தல அமைவிடம்

கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் " திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா. 

ஞானி, சாந்த சொரூபியான இவர் பார்வை வக்கிரமாகும் பொழுது நரம்பு தளர்ச்சி , பேச்சு திறன் பாதிப்பு, மூளை நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. காவிரி வட கரையில் உள்ள 63 தலங்களில் 11 வது தலம் இது. சமயக் குரவர் நால்வராலும் பாடப் பெற்ற திருத் தலம் இது. காசிக்கு நிகரான தலம். மற்ற தலங்கள் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, சாயாவனம், மற்றும் திருவாஞ்சியம் ஆகும். 

நவக்கிரக நாயகர்கள்

இத் தல இறைவன் வழிபடுபவரது பாவங்களை போக்குவதால் இத் தலம் பாபநாசபுரம் என்றும் வணங்கப்படுகிறது. சிவன், நடராசர், வீர பத்திரர் என இத் தலத்தின் மூர்த்திகள் மூவர். அது போன்றே தீர்த்தங்களும் மூன்று. இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால், " தேயாத தீவினையும் வல் வினையும் போகுமே " என சீர்காழிப் பெருமான் பாடியுள்ளார். நவக்கிரக நாயகர்கள் ஒரே நேர் வரிசையில் நின்று அருளும் தலம் இது. கருவறையில் திருவெண்காட்டு ஈஸ்வரர் மாகாலிங்கமாக காட்சி தருகிறார். புதன் பகவான் நான்கு திருக் கரங்களுடன் பூமியி புதைந்திருந்து வெளிப்பட்டவர். கயாவில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம் உள்ளது. பித்ரு கடன்கள் இத் தலத்தில் செய்வது சாலச் சிறந்தது. துறவியாவதற்கு முன் பட்டினத்தார் வழிபட்ட தலம் இது. ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றோர் திருப்பணி செய்துள்ளனர்.

காசிக்கு நிகரான திருவெண்காடு



Add caption

திரு ஞான சம்பந்தர் இத் தலம் வந்தபோது மணல் யாவும் சிவ லிங்கமாகவும், ஊரே சிவ லோகமாகவும் காட்சியளிக்க கண்டு, " அம்மா " என அம்பாளை விளிக்க, அம்மனும் , சம்பந்தரை தன் இடுப்பில் ஏந்தி இறைவனிடம் சேர்த்தாராம். இதனால் அம்மன் " பிள்ளை இடுக்கி அம்மன் " ஆனார். திருநாவுக்கரசர், சுண்டரர், மாணிக்கவாசகர் என சமயக் குரவர் நால்வரும் இத் தலத்தின் மீது பதிகங்கள் பாடியுள்ளனர். மூர்த்தி, தீர்த்தங்களை போன்று விருட்சங்களும் இங்கு, வடவால, கொன்றை, வில்வம் என மூன்று.

வெவ்வேறு கோலத்தில் வழிபாடுகள்

மன நோய், சீதள நோய், வெண் குஷ்டம், ஆண்மைக் குறைவு, ரத்த சோகை, புற்று நோய், நரம்பு தளர்ச்சி ஆகியன புதன் பகவானால் ஏற்படக் கூடிய நோய்கள். இத் தலத்தில் அகோர மூர்த்தி காட்சி தருகிறார். ஈசானம், தத்புருஷம், வாம தேவம், ஸத்யோஜாதம், அகோரம் என்ற சிவனின் ஐந்து முகங்களில் அகோரத்திற்கு உரியவர் இவர். ஞாயிற்று கிழமைகளில் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. 

அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப இவரை வெவ்வேறு கோலத்தில் வழிபட வேண்டும். மோட்சம் கிட்ட வெண்மை நிறத்திலும், காரிய சித்தி கிட்ட சிவப்பு நிறத்திலும், சத்ரு நாசத்திற்கு கரு நிறத்திலும் இந்த அகோர முர்த்தியை வணங்க வேண்டும். 

பிள்ளைப் பேறு அருளும் பரிகாரத் தலம்

" சிவஞான போதம் " என்ற நூலை தமிழுக்கு தந்த " மெய்க்கண்ட தேவரின் " தந்தையும், தாயும் தங்களது ஜாதகப்படி பிள்ளைப் பேறு இல்லை என்று அறிந்தும், இத் தலம் வந்து, மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, திருவெண்காட்டு இறைவனை தொழுது பிள்ளைப் பேறு பெற்றனர். இது பிள்ளைப் பேறு அளிக்கும் திருத்தலம்.

சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.



இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும், வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன.


அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது.



திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம், அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம்.



நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.
புதனுக்கு உகந்தவை:



ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி


காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.



இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.

கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். ம்யிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.

நன்றி தினமலர்

No comments: